
புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக கர்நாடகாவை சேர்ந்தவிஜய் மல்லையா (68) இருந்தார். இவர் கடந்த 1978-ம் ஆண்டில் கிங்பிஷர் மதுபான நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தொடங்கினார். இவை தவிர பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார்.
கடந்த 2011, 2012-ம் ஆண்டுகளில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதன்காரணமாக கடந்த 2012-ம் ஆண்டில் கிங் பிஷர் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment