
கோவை: டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் வெங்கடாசலம் இன்று (ஜூலை 15) வெளியிட்ட செய்திக் குறிப்பு: "கோவை மாவட்டத்தில், பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்துள்ளதால் விவசாயிகள் அதிகளவில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பாண்டில் சோளம் 1,396 ஹெக்டேர், பயிறு வகைகள் 325 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 1,118 ஹெக்டேர் பரப்பளவுகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment