
புதுடெல்லி: போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க இந்தியாவால் இயலவில்லை என்ற சிட்டி குழுமத்தின் அறிக்கையை மறுத்துள்ள மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்தியா போராடும் என்று சிட்டி குழுமம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிக்கையை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. அமைசசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில அச்சு, மின்னணு ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட சிட்டி குழுமத்தின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை, 7% வளர்ச்சி விகிதத்துடன் கூட போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்தியா போராடும் என்று கணித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment