
புதுடெல்லி: கடந்த ஆண்டு 4.60 கோடிக்கும் அதிகமானோர் புதிய வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா எவ்வாறு புதிய வேலைகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்பதை, இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை பிரதிபலிக்கிறது. 1981-82-க்குப் பிறகு முதல்முறையாக இரண்டரை மடங்குக்கும் மேலான வேலைவாய்ப்புகளை மோடி அரசு கடந்த ஆண்டு உருவாக்கி உள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு 4.60 கோடிக்கும் அதிகமானோர் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இது 6% அதிகரிப்பு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment