
பெங்களூரு: மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடி காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதன் நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு மாற்றாக இந்த தளம் பார்க்கப்பட்டது.
நிதி நெருக்கடி, நிறுவனத்தின் சந்தை நிலவரம், தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான பராமரிப்பு செலவு, புதிய மூலதனத்தை திரட்டும் நோக்கில் மேற்கொண்ட பார்ட்னர்ஷிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களினால் அந்நிறுவனம் ஸ்தம்பித்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment