
புனே: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் ‘Bajaj Freedom 125’ என்ற சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கு ஆகும் செலவு மற்றும் வாகன புகை உமிழ்வு இதில் குறைவு என சொல்லப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் சந்தையில் சிஎன்ஜி சக்தியில் இயங்கும் கார்கள் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளன. இந்த சூழலில் சிஎன்ஜி-யில் இயங்கும் முதல் பைக்கை பஜாஜ் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பைக்கில் இந்த நுட்பத்தை பயன்படுத்துவது இதுவே உலக அளவில் முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment