
மதுரை: உளுந்தம் பருப்பு விலை உயர்வால் அப்பளம் தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அப்பளம் தயாரிப்பு மூலப்பொருளான உளுந்தம் பருப்பை மானிய விலையில் வழங்க தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்பளம் தயாரிக்கும் தொழில் நாடு முழுவதும் சிறு தொழிலாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுமார் 770 குடிசை தொழில்களும், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 10-க்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்களும் அப்பளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் தயாரிக்கப்படும் அப்பளம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment