
காந்திநகர்: கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கூட்டுறவுத் துறை கொண்டு வந்துள்ளது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு காந்திநகரில் (குஜராத்) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, "2021-ஆம் ஆண்டு இந்த நாளில், பிரதமர் நரேந்திர மோடி கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவினார். இந்த அமைச்சகம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து இன்று வரை, 'ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு' என்ற உறுதியுடன் நாட்டின் கோடிக்கணக்கான கூட்டுறவு சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment