
கோவை: கோவை மாவட்டத்தில் உற்பத்தித் துறையின்கீழ் செயல்படும் நிறுவனங்களில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதாகவும் இதனால் பொருட்கள் உற்பத்தி பணிகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் தொழில்துறையினர் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தனியார் நிறுவனம் சார்பில் கோவையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ‘டைட்டான்’ நிறுவனத்தின் தலைமை நிலைத்தன்மை அதிகாரி ஸ்ரீதர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில் சென்னை கிண்டியில் தொழிலாளர் திறன் மேம்பாட்டு மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்து பொறியியல் துறை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவையில் திறன் மேம்பாட்டு மையம் ஜூலை 24-ம் தேதி முதல் செயல்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment