
சுகாதாரமற்ற முறையில் தயார் செய்து வைக்கப்பட்ட பீட்சா மாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தப் படம் பெங்களூரு நகரில் உள்ள டோமினோஸ் பீட்சாவில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இதனை கண்டு நெட்டிசன்களும் கொதித்தெழுந்து கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில், டோமினோஸ் அது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
‘பீட்சா’ இத்தாலி நாட்டின் உணவு வகையை சேர்ந்தது. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படும் உணவு வகைகளில் ஒன்று. சுவையான ஒரு ஸ்லைஸ் இத்தாலியன் பீட்சா வேண்டுமா என்றால், வேண்டாம் என சொல்பவர்கள் மிகவும் சிலரே. அந்த அளவிற்கு இதன் ருசி பலரையும் கவர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment