
புதுடெல்லி: சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை கண்காணிக்கவும் மக்களின் புகார்களை விசாரிக்கவும் ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தெரிவித்தது. அரசு சார்பிலே குழு அமைக்கப்படும் அல்லது சமூக வலைதள நிறுவனங்கள் தங்களுக்கான ஒழுங்குமுறை குழுவை உருவாக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியது.
சுய ஒழுங்குமுறை குழுவை உருவாக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சம்மதம் தெரிவித்து இருந்தன. ஆனால், கூகுள் நிறுவனத்துக்கு சுய ஒழுங்குமுறை குழுவை உருவாக்க விருப்பமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment