
ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் மும்பை முதல் அகமதாபாத் வரை செல்லும் முதல் விமானத்தை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும், இணை அமைச்சர் வி.கே. சிங்கும் இன்று (ஆகஸ்ட் 7) மெய்நிகர் வழியில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
டெல்லி சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஆகாச ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை டெல்லியில் அமைச்சர்கள் சிந்தியா, வி.கே. சிங், சிவில் விமானத்துறை செயலாளர் ராஜீவ் பன்சல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆகாசா ஏர் விமான நிலைய நிறுவனர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா அவரது துணைவியார் ரேகா ஜூன்ஜூன்வாலா, ஆகாச ஏர் நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி வினய் துபே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment