
புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகமானது. யுபிஐ நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செயல்பாடு மிக எளிமையானது. தற்போது பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனைக்கான வசதிகளை வழங்கி வருகின்றன. எனினும், இந்தியாவில் நிகழும் யுபிஐ பரிவர்த்தனையில் 80 சதவீதம் கூகுள் பே மற்றும் போன்பே ஆகிய இரு செயலிகளின் வழியாகவே நடைபெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment