
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிவடைந்து 60,382 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 68 புள்ளிகள் சரிவடைந்து 17,758 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. காலை 10:29 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 536.21 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,136.51 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி157.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,668.85ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment