
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்து 840 விமானங்கள் வாங்க ஒப்பந்த மேற்கொண்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் 370 விமானங்கள் பிற்பாடு தேவையின் அடிப்படையில் வாங்கப்படும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏர்இந்தியா நிறுவனம் 250 ஏர்பஸ் விமானங்களையும், 220 போயிங் விமானங்களையும் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில், தேவையின் அடிப்படையில் கூடுதலாக 370 விமானங்கள் வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment