
மும்பை: கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்தியப் பங்குச் சந்தையில் தொடர் சரிவு காணப்பட்ட நிலையில், 6 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 16-ம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரையில் சென்செக்ஸ் 1855 புள்ளிகள் சரிந்தது. இது 3 சதவீத சரிவு ஆகும். இதனால், மும்பைச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.8.30 லட்சம் கோடி குறைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment