
புதுடெல்லி: சில்லரை பணவீக்கம் அதிகரிப்பதால் அதை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி பரிந்துரைப்படி எரிபொருள் மற்றும் சோளம் போன்ற பொருட்களுக்கான வரிகளை குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம் என முக்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நாட்டின் சில்லரை பணவீக்கம் கடந்த டிசம்பரில் 5.72 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜனவரியில் 6.52 சதவீதமாக அதிகரித்தது. பால், சோளம் மற்றும் சோயா எண்ணெய் போன்றவற்றின் விலைகள் உணவு பணவீக்கத்தை அதிகரிக்கும் என தெரிகிறது. இவற்றை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல், சோளம் ஆகியவற்றுக்கான வரிகளை குறைக்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. சோளத்துக்கு தற்போது 60 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment