
சென்னை: சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.
பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் சரக்குகளை சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்து, பல்வேறு ஊர்களுக்கு சாலை வழியாக கொண்டுசெல்லப்படுகிறது. இதனால், சாலை மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், புதுச்சேரி துறைமுகத்துக்கு கொண்டு வந்து, அங்கிருந்து சிறிய ரக சரக்கு கப்பல்கள் மூலம்சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரவும், பின்னர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment