
பெரியகுளம்: சித்த மருத்துவம், உணவுப் பொருள் தயாரிப்பு போன்றவற்றுக்காக இலவம் பிஞ்சுகளின் தேவை வட மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இதற்காக உதிரும் பிஞ்சுகளைச் சேகரிப்பதில் பெரியகுளம் பகுதி கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், கடமலைக்குண்டு, கண்டமனூர், போடி, முந்தல், குரங்கணி, சிறைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இலவம் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பூக்கள் பூத்து தற்போது காய் பருவத்தில் உள்ளன. இளம் பிஞ்சுகளைப் பொருத்தவரை அணில் உள்ளிட்ட சிறு விலங்கினங்கள் கடிப்பதாலும் பலத்த காற்று, மழை உள்ளிட்ட காரணங்களாலும் மரங்களில் இருந்து அதிகளவில் உதிர்வது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment