
கோவை: நெருக்கடியைச் சமாளிக்க பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, அந்த சங்கத்தின் தலைவர் ரவி சாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு பருத்தி சீசன் அல்லாத காலத்தில் (ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 2022 வரை) பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்களித்தது போன்று நடப்பு பருத்தி பருவ காலத்திலும் இறக்குமதி வரியிலிருந்து மத்திய நிதித்துறை அமைச்சர் விலக்களிக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment