
சென்னை: வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், முதல்முறையாக தமிழில் ‘வருமானத்தில் வரி பிடித்தம் செய்பவர்களுக்கான கையேடு' வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிவருமான வரித் துறை அலுவலகம் சார்பில், வரி பிடித்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிற்சாலைப் பிரதிநிதிகள், வரி செலுத்துவோர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய வருமான வரித்துறை தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர்ஆர்.ரவிச்சந்திரன், வரி பிடித்தம்செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment