
கோவை: ‘விஷு’ பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து கடந்த 7 நாட்களில் மொத்தம் 14 டன் எடையிலான காய்கறிகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், மலையாள புத்தாண்டு தினமான ‘விஷு’வை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக அளவு கையாளப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment