
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வடைந்து 59,850 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 17,670 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. இருந்தபோதிலும் தகவல்தொழில்நுட்பம், பார்மா பங்குகளின் விற்பனை அழுத்தத்தால் சரிவை நோக்கி பயணித்தன. காலை 10.26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 26.30 புள்ளிகள் உயர்ந்து 59681.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,633.65 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment