
கலிஃபோர்னியா: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கை களை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளிலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இதனை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது, சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும் என ஆல்பபெட் பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியத்தில் 21.8 கோடி டாலர் (ரூ.1,800 கோடி) பங்குசார்ந்த பரிசுகளும் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment