
சென்னை: வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வட்டி, அபராதம் வசூலிப்பதுடன் வழக்கு தொடர்ந்து சிறை தண்டனையும் பெற்றுத் தரப்படும் என்று வருமான வரித் துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்துஅவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் நேரடி வரி நிகர வசூல் ரூ.1 லட்சத்து 08 ஆயிரத்து 364 கோடி. இது 20 சதவீதமாகும். அகிலஇந்திய அளவில் நிகர வரி வசூல்18 சதவீதம்தான். ரீபண்ட் இல்லாமல் மொத்த வரி வசூல் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400 கோடி. இது 23 சதவீதம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment