
ஈரோடு: முட்டைக்கோஸ் விலை கிலோ ரூ.1-க்கு சரிந்துள்ளதால், தாளவாடி சுற்றுவட்டார விவசாயிகள் அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முட்டைக்கோஸ் பயிர் குறைந்த அளவில் சாகுபடி செய்யப்பட்டது. அதன் காரணமாக வரத்து குறைந்து, கிலோ ரூ.20 வரை விற்பனையானது. அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏராளமான விவசாயிகள் அதை பயிரிட்டனர். மூன்று மாத பயிரான முட்டைக்கோஸ், தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் விலை வெகுவாக சரிந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment