
தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சிறார் மற்றும் வயது வந்தோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். இந்த நூலகத்தில் புவியியல், மொழிகள் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த தரமான புத்தகங்கள் இடம்பெறும். ஊராட்சி மற்றும் வார்டு அளவில் நூலங்களை தொடங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நூலகங்களில் தேசிய டிஜிட்டல் நூலகத்தை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் கல்வி சேவை பாதிக்கப்பட்டது. இதை ஈடுகட்டும் வகையில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தேசிய நூலக அறக்கட்டளை, குழந்தைகள் நூலக அறக்கட்டளை மூலம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நூலகங்களில் பிராந்திய மற்றும் ஆங்கில நூல்களை அதிகரிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் மூலம் நூலக வசதியை விரிவுபடுத்தலாம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அனைத்து தரப்பினரிமும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment