
மும்பை: மும்பை ஓர்லி பகுதியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.240கோடிக்கு விற்பனை செய்யப்பட் டுள்ளது. இதுவே இந்தியாவின் மிக விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பாக கருதப்படுகிறது.
மும்பை ஒர்லி பகுதியில் உள்ளஅன்னி பெசன்ட் சாலையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்றுஇந்த கோபுரங்கள் அழைக்கப்படு கின்றன. இதில் ஒரு கோபுரத்தின் (டவர்- பி) 63, 64, 65 ஆகிய தளங்களில் ‘பென்ட்ஹவுஸ்’ என்றுஅழைக்கப்படும் உச்சிப் பகுதி குடியிருப்பு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment