
சென்னை: தங்கத்தின் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.44 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த டிசம்பர் 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,992-க்கு விற்பனையானது. பிறகு படிப்படியாக விலை உயர்ந்து, ஜன. 16-ம் தேதி ரூ.42,536-க்கும், ஜனவரி 26-ம் தேதி ரூ.43,040-க்கும் விற்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment