
மும்பை: நாட்டின் வங்கிகளின் நிலைமை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையால் அதானி குழு நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த குழுமத்துக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையில், இந்திய வங்கிகள் அதானி குழுமத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடி அளவில் கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்தக் கடனில் 38 சதவீதம் ஆகும். எஸ்பிஐ ரூ.21,000 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடி கடன் வழங்கியுள்ளன. இந்தஸ்இந்த் வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் அதானி குழுமத்துக்கு அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், நாட்டின் வங்கிகளின் நிலைமை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment