
திருப்பூர்: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அளிக்கும் குறுகிய காலக் கடன் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது: நிலவிவரும் ஏற்ற, இறக்கமான மற்றும் சவாலான உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பணவீக்கம் மற்றும் மூலதனத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சிதான் தற்போதைய இந்த அதிகரிப்பாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment