
புதுடெல்லி: கிரிப்டோ சொத்துகளை நெறிமுறைப்படுத்த உலக அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இம்மாத இறுதியில் பெங்களூருவில் ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிர்மலா சீதாராமன் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கிரப்டோ கரன்சி சொத்துகள் தொடர்பாக உலக அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment