
புதுடெல்லி: பொதுத்துறை வங்கி கணக்குகளில் வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் இருக்கும் நிதி பற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத நிலையிலும், உரிமை கோரப்படாமலும் இருந்த 10.24 கோடி கணக்குகளில் மொத்தம் ரூ.35,012 கோடி இருந்தது. அது ரிசர்வ் வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.8,086 கோடி இருந்தது. இரண்டாவதாக பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.5,340 கோடியும், கனரா வங்கியில் ரூ.4,558 கோடியும், பாங்க் ஆப் பரோடாவில் ரூ.3,904 கோடியும் உரிமை கோரப்படாமல் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment