
வாஷிங்டன்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலரைத் தாண்டி உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் வூட்டன் (எல்விஎம்எச்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட். இவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவருடைய நிறுவன பங்குகளின் மதிப்பு கடந்த 4-ம் தேதி புதிய உச்சத்தைத் தொட்டது. இதனால் இவருடைய சொத்து மதிப்பு 201 பில்லியன் டாலராக (ரூ.16.46 லட்சம் கோடி) உயர்ந்தது. ஒரே நாளில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி உயர்ந்தது. இதன்மூலம் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கடந்த 3-வது நபர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment