
சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) கடந்த மார்ச்31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வட்டி, வரிகள், தேய்மானம், மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய், வரிக்கு முந்தைய லாபம், வரிக்கு பிந்தைய லாபம் ஆகியவற்றில் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திஉள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2023 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5,225.41 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.4,069.04 கோடியாக இருந்தது. இது 28 சதவீத வளர்ச்சியாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment