
சென்னை: பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் 2023-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவன இயக்குநர்கள் குழு ஒரு பங்குக்கு ரூ.6 ஈவுத்தொகை வழங்க அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு முடிவுகளின்படி 2023-ம் ஆண்டில் தொடர்ச்சியான சிறப்பான வணிக மற்றும் நிதி செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த 2021-22-ல் ரூ.24,284.38 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.31,821.45 கோடியாக உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் கடந்த 2022 நிதியாண்டில் ரூ.1,074.38 கோடியாக இருந்த நிலையில் தற்போது 9.7 சதவீதம் அதிகரித்து ரூ.1,178.96 கோடியாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment