
புதுடெல்லி: ஜி7 நாடுகளின் நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் ஜப்பானின் நிகாட்டா நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக நிர்மலா சீதாராமன் ஜப்பான் சென்றுள்ளார்.
இந்த ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக, சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) நிர்வாக இயக்குநர் கே.ஜியோர்ஜிவாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்துப் பேசினார். மேலும், பிரேசில் நாட்டுநிதியமைச்சர் ஹடாட் பெர்னான்டோவையும் நிதியமைச்சர் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment