
ஹைதராபாத்: தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் நேற்று தெரிவித்துள்ளதாவது:
ஆப்பிள் நிறுவனத்துக்கு ஐபோன்களை தயாரித்து அளிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் தெலங்கானாவில் புதிய ஆலை அமைக்க முன்வந்துள்ளது. ஹைதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொங்கர் கலான் என்ற இடத்தில் பாக்ஸ்கான் இந்த ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக, 500 மில்லியன் டாலரை (ரூ.4000 கோடி) அந்த நிறுவனம் முதலீடு செய்கிறது. அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக திறக்கப்படும் இந்த ஆலையின் மூலமாக 25,000 மக்களுக்கு நேரடியான வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ராமா ராவ் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment