
போலி ஜிஎஸ்டி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்,போலி ஜிஎஸ்டி பதிவைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில வரித் துறை அதிகாரிகள் 2 மாதங்களுக்கு சிறப்பு சோதனையை தொடங்கி உள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே வரி முறையைக் கொண்டுவரும் நோக்கில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அறிமுகம் செய்தது.தற்போது நாடு முழுவதும் 1.39 கோடி தொழில்கள் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்துள்ளன. இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. எனினும், இதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment