
சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி எல்ஐசியின் மொத்த பிரீமிய வருமானம் 10.90 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.4,74,005 கோடியாக உள்ளது.
வணிக ஆண்டு 2022-23-ல்முதல் வருட பிரீமிய அடிப்படையில் சந்தை பங்களிப்பாக 62.58சதவீதம் பெற்று எல்ஐசி முதன்மைஇடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. கடந்த வணிக ஆண்டில் முதல் வருட பிரீமியமான ரூ.1.98 லட்சம் கோடிகளை விட 16.67 சதவீதம் அதிகமாக ரூ.2.32 லட்சம் கோடிகளை பெற்றுள்ளது. 2 கோடியே 4 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment