
புதுடெல்லி: இந்திய வங்கிகள் தொடர்ந்து வலிமையாக உள்ளன என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்கூட்டமைப்பின் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆற்றிய உரை: "புவி அரசியல் காரணமாக நிகழும் மோதல்கள், பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்க உயர்வு, பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகளால் ஏற்பட்டுள்ள கடினமான நிதிநிலை ஆகியவை காரணமாக வளர்ச்சியில் பின்தங்குவதற்கான சவாலை சர்வதேச பொருளாதாரம் எதிர்கொண்டு வருகிறது. கடந்த 2022ல் 3.4 சதவீதமாக இருந்த உலகின் பொருளாதார வளர்ச்சி 2023ல் 2.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 2024ல் இது 3 சதவீதமாக சற்று உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment