
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். இசபெல்லா தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.17,746 கோடியாகவும், வைப்புநிதி 7% வளர்ச்சியுடன் ரூ.9,527 கோடியாகவும் கடன்கள் 9% வளர்ச்சியோடு ரூ.8,219 கோடியாகவும் உள்ளது. மேலும் முடிந்த நிதியாண்டில் வங்கியின் நிகர இலாபம் 10.15 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.67.42 கோடியாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment