
திருப்பூர்: ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மற்றும் பருத்தி விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டின் தொடக்கமே சுணக்கமாக இருந்ததால், ஏற்றுமதி வர்த்தகமும் குறைந்தது. இந்த நிலையில் அபரிமிதமாக உயர்ந்த பஞ்சு மற்றும் நூல் விலை, சில மாதங்களுக்கு பிறகு சீராக குறையத் தொடங்கியது.
இதன் பின்னரும் ஏற்றுமதி வர்த்தகம் முழுவீச்சில் வேகம் பெறவில்லை. போர்ச் சூழலால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் செலவுகளை குறைத்துக் கொண்டதாகவும், ஆடை விற்பனையும் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment