
மும்பை: நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,303 புள்ளிகள் உயர்ந்து 74,382 ஆகவும், நிஃப்டி 735 புள்ளிகள் உயர்ந்து 22,620 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 3.20%, நிஃப்டி 3.36% உயர்ந்தன.
கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் வரையிலேயே வெல்லும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதையடுத்து கடந்த திங்கள் கிழமை பங்குச் சந்தை உச்சம் தொட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment