
மும்பை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளானது இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோர் தங்களது சொத்து மதிப்பில் பல கோடிகளை ஒரே நாளில் இழந்துள்ளனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. செவ்வாய்க்கிழமை அன்று வெளியான தேர்தல் முடிவுகளால் பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. இன்று (புதன்கிழமை) சந்தை வர்த்தகம் சீரான ஏற்றம் கண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment