
கலிபோர்னியா: தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் சூழலில் ஏஐ நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் என்விடியா நிறுவனம், அதன் சந்தை மதிப்பில் உலகின் 2-வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் ஆப்பிளை அந்நிறுவனம் முந்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நிறுவனமாக திகழ்கிறது என்விடியா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம். ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment