
மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நேற்றைய தினம் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 4,389 புள்ளிகள், நிஃப்டி 1,379 புள்ளிகள் சரிந்தன. மொத்த அளவில் சென்செக்ஸ் 5.74%, நிஃப்டி 5.93% சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் இருந்தது, பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment