
மும்பை: அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே வெளிநாட்டு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு வடிவமைக்கப்பட்டது. அது முழுவதும் ஆதாரமற்றது என அதானி குழுமத்தின் 32-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அதன் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
ஆண்டு பொதுக் கூட்டத்தை முன்னிட்டு பங்குதாரர்களிடம் அவர் பேசி இருந்தார். அப்போது அவர் கூறியதாவது: “வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை நாம் எதிர்கொண்டோம். அது நமது பல ஆண்டுகால கடின உழைப்பை கேள்விக்குள் ஆக்கியது. நமது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஜோடிக்கப்பட்ட அந்த குற்றச்சாட்டை எதிர்த்து நாம் போராடினோம். நமது அடித்தளத்தை எந்த சவாலும் பலவீனப்படுத்த முடியாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment