
சென்னை: தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் விரிவுபடுத்திட, தமிழக அரசு சார்பில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையங்கள் தொடங்கப்படும். வரும் நிதியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.4.11 கோடி மதிப்பீட்டில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அறிவிப்புகளை துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்டார். அதன் விவரம்: > ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் கலைஞர் கடனுதவித் திட்டம். குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்கள் கடன் பெறுவதினை ரூ.20 லட்சம் வரை எளிதாக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். தாய்கோ வங்கி அளிக்கும் கடனுக்கு தற்போது ஆண்டுக்கு 10% வட்டி விகிதம் என்ற அளவில் இருந்து 7% வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment