
புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் பணபரிமாற்றம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள குலோபல் டேட்டா எனும் தரவு ஆய்வு நிறுவனம், கடந்த 2018-ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023-ல் 58.1% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, குலோபல் டேட்பா எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாரம்பரிய ரொக்கப் பணபரிமாற்றத்துக்கு மாற்றாக ஈ-காமர்ஸ் எனும் மாற்று கட்டண முறை வேகமாக அதிகரித்து வருகிறது. யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொபைல் வாலட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இது பெரும்பாலும் யுபிஐ மூலம் இயக்கப்படுகிறது.க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் நிகழ்நேரத்தில் பணபரிமாற்றத்தை எளிதாக்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment